இன்னொரு அரைநிமிடக்கதை
July 23rd, 2008 Posted in Uncategorizedஇன்னொரு அரைநிமிடக்கதை
இரண்டு நாட்களாக என் மொபைலுக்கு பின்னிரவுகளில் குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. டேண்ட்லைன் நெம்பர்தான், தூக்கத்தில் எடுக்கவே இல்லை. மீண்டும் நேற்று வந்தது. ம்ஹூம் எடுக்கவில்லை. காலையில் திரும்ப அந்த நெம்பருக்கு அழைத்துப் பார்த்தேன், நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் என்றது. என்னடா இது, அதிகப்படியான கியூரியாசிட்டியுடன் பி.எஸ்.என்.எல் சைட்டில் அந்த நெம்பரை அடித்துப் பார்த்தால் நெம்பர் இல்லை என்று சொன்னது. டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் பிரெண்டுக்கு அடித்து விவரத்தை சொன்னேன். அவரும் செக் பண்ணி பார்த்துவிட்டு அப்படி ஒரு நெம்பர் இன்னும் கொடுக்கவில்லை என சொன்னார். மனது திக்திக் என அடித்தது.
பின்னர் வேலைப்பளுவில் மறந்தே போய்விட்டேன். இரவு அந்த நினைவு இல்லாமல் தூங்கிகொண்டிருந்த போது மீண்டும் அதே அழைப்பு, மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பச்சைக்கலர் பொத்தானை அமுக்கி
“ஹலோ” என்றேன். !!!
“????$$$@@@@@@”








enakum purila???
daai Rambam arukkaadha po…..
yen kathai solli kolluinkal.
Hey guys i think he has kept an alarm in mobile!
onnume purila
what??